மாணாக்கர் பக்கம்

மாணாக்கர் பரிசு திட்டம்-137இன் விடைகள் :

1. தமிழ்மணம் கமழ வேண்டும் - பாபநாசம் சிவன்
2. ஆரோ இவர் ஆரோ? - சீர்காழி அருணாசலக் கவிராயர்
3. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் - இராமலிங்க அடிகள்
4. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி - பாரதியார்
5. ஆடற்கலைக் கழகு தேடப் பிறந்தவள் - பாவேந்தர்
6. திங்கள் மாலை வெண்குடையான் - இளங்கோ அடிகள்
7. அலைபாயுதே கண்ணா - ஊத்துக்காட்டு வேங்கடசுப்பர்
8. ஏழிசையாய் இசைப்பயனாய் - சுந்தரர்
9. தெள்ளுதமிழுக் குதவு சீலன் - சென்னிகுளம் அண்ணாமலையார்
10. ஞானப்பழத்தைப் பிழிந்து - சங்கரதாசு அடிகள்

சரியான விடை யெழுதியவர் : ச. செந்தமிழ்ச்செல்வி, கள்ளக்குறிச்சி.

மாணாக்கர் பரிசு திட்டம் - 138

விடுகதை

மழைமுகிற் பேரின் பின்னே வருகின்ற பெற்றந் தன்னைத்
தழுவிடு மரத னப்பேர் தன்னையுஞ் சேர்த்த சொல்லோர்
வழுவிலாக் கூலத் தின்பேர் வகையுணர்ந் துரைசெய் வாரை
மொழிவள முடையா ரென்பேன் முயன்றது கண்டு கூறீர்!

விடைகள் வரும் மடங்கல் க (5.10.2008)க்குள் வந்து சேரவேண்டும்.